ஓருநாள் மதியம், அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது வேளியில் இசைக் கருவிகளின் கீதம் கேட்டது. அது ஒரு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ள பகுதி என்பதால் ஆச்சர்யத்டன் சாரம் வழியெ பார்த்தேன். பழையக் காட்சிதான் ஒரு சிறுப் பெண் கயிற்றில் நடந்து வித்தைகாட்டிகோண்டிருந்தாள். பார்த்து நாளாகிவிட்டபடியால் ஆர்வமுடன் கண்டேன். பலவித நடனம் மற்றும் வித்தைகளை செய்துக்கோண்டிருந்தாள், அது மதியம் என்பதால் நிறுவனங்களில் பணிபுரிவோர் கூட ஆரம்பித்தனர், பிறகு நான் கண்ட காட்சிதான் நெகிழ செய்தது. கூடியிருந்த அனைவரும் அமைதியாக நின்று பார்த்தனர்,ஒருவரும் கைத்தட்டவில்லை, அனந்தமடையவில்லை ஏன் என்றால் அனைவரும் படித்தவர்களம்! சரி, கூத்து முடிந்ததும் பரிசு நேரம், அந்தப் பேண் சிறுத் தட்டை ஏந்தி வலம் வந்தாள். தட்டில் விழுந்ததோ சில ரூபாய்கள் மட்டுமே. ஏமாற்றத்துடன் சென்ற அச் சிறுமியை பார்த்தபோது மனதிற்க்குள் சில கேள்விகள்… வாழ்க்கையை திரும்ப பார்க்கச் செய்தது….
ஒருகாலத்தில் நாம் இதே கூத்தை கைத்தட்டி விசில் அடித்து, இயன்ற பரிசுக் கொடுத்து ஆணந்தமடைந்த நாம் இன்று…. படித்துவிட்டோம் என்ற நினைப்பில் மகிழ்ச்சியையும் உதவி செய்வதையும் தொலைத்து விட்டோம். இது தான் இந்தக் கல்வி நமக்கு கற்றுக் கொடுத்ததா?
நிறுவனங்களில் மன அலுத்ததுடன் யாரோ பயனடைய பாடுபடும் நாம் நம்மை மகிழ்ச்சியாக வாழ மறந்துவிட்டோம். படித்தவர்களுக்கு சமூக அக்கறை குறைந்துவிட்டது என்றெ சொல்ல வேண்டும். இன்று நம்மில் பலர் தனக்கு மற்றும் தன் சந்ததியினற்க்காக மன அலுத்ததுடன் ஓடிக்கோண்டிருக்கிறேம். சுயநலம் தான் நாம் கற்றுக் கோண்ட பாடமா?